Skip to main content

உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..!

 உங்களுக்கு பார்ட்டி, கல்யாணம் செல்ல பிளான் இருக்கா? அப்போ உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..!

பார்ட்டி அல்லது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பெண்கள் 2-3 நாட்களாக ப்ளீச்சிங், ஃபேஸ் பேக், வேக்சிங், புருவம், ஃபேஷியல் என பல பியூட்டி பார்லர்களுக்கு சென்று வருவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். உடனடி பளபளப்பைப் பெற ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தைத் தேய்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம். பார்ட்டி மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் இருக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகள் உங்களுக்கு சிறப்பான ரிசல்ட்டை தரும்.. அது என்னென்ன? ஃபேஸ்பேக் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

வாழைப்பழ ஃபேஸ் பேக்

 வாழைப்பழ ஃபேஸ் பேக்கில் பல நன்மைகள் உள்ளன. சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி, வெயிலின் வெப்பத்தைக் குறைத்து, சூரியக் கதிர்களால் சேதமடைந்த சருமத்தை மீட்டெடுக்கிறது. வாழைப்பழத்துடன் வேறு சில பொருட்களையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடுவது நல்ல பலனைத் தரும். பழுத்த வாழைப்பழத்தில் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மற்றும் கோகோ வெண்ணெய் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டு, பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பளபளப்பான, புதிய சருமம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

உங்களுக்கு பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ளதா? பார்ட்டிக்கு செல்லும் முன் இந்த ஃபேஸ் பேக்கை தடவவும். இது கறைகளை மட்டும் மறைப்பதில்லை. தோல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். வெள்ளரிக்காயைப் பிழிந்து அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகத்தை சுத்தம் செய்த பின் இந்த ஃபேஸ் பேக்கை தடவி இருபது நிமிடம் கழித்து நன்றாக மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இது உங்களுக்கு உடனடி பளபளப்பான சருமத்தை தரும். 

பப்பாளி ஃபேஸ் பேக் 

பப்பாளி சருமத்தைப் பாதுகாப்பதில் அற்புதமாக செயல்படுகிறது. இது உங்களுக்கு புதிய சருமத்தை கொடுக்கும். நீங்கள் செல்லும் திருமணத்திலோ அல்லது மற்ற நிகழ்ச்சியிலோ ஜொலிக்க விரும்பினால், இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் அந்த அதிசயங்களைச் செய்கிறது. பழுத்த பப்பாளியை பிழிந்து அதனுடன் சில துளிகள் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஃபேஸ் பேக் போடவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால், இறந்த சருமம் நீங்கி, புதிய சருமத்துடன் முகம் பளபளக்கும்.


Popular posts from this blog

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்