Sunday, December 9, 2018

மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் போன்றவைகளால் உங்கள் குழந்தைக்கு அசெளகரியமா? இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...

மூக்கடைப்பு பிரச்சினையின் அறிகுறிகள் மூச்சு விடும் போது சத்தம் கேட்குதல் அல்லது சிரமப்படுதல் குறட்டை மூக்கு ஒழுகுதல் தும்மல் மூக்கு ஒழுகுதல் குழந்தைகள் மட்டும் ஏன் அடிக்கடி இதனால் பாதிக்கப்படுகிறார்கள்?


 குழந்தைகள் வளர்கின்ற பருவத்தில் இருப்பதால் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலமும் சரியாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு அடிக்கடி சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.


தாய்ப்பால் 

தாய்ப்பால் குழந்தைக்கு அரும் பெரும் மருந்தாக செயல்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாடிகள், ஊட்டச்சத்துகள் போன்றவை உங்கள் குழந்தையின் வலுமைக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தையின் சளி இருமலுக்கும் மருந்தாக பயன்படுகிறது. குழந்தைக்கு ஏற்படும் மூக்கடைப்பை தாய்ப்பாலை க் கொண்டு இரண்டு வழிகளில் சரி செய்யலாம். 


பயன்படுத்தும் முறை

 1. முதலில் குழந்தையின் தலையை சற்று உயரமாக வைத்துக் கொண்டு மூக்கில் இரண்டு தாய்ப்பால் சொட்டுகள் விடலாம். பிறகு குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

2. மூக்கடைப்பால் குழந்தை சரியாக பால் குடிக்காது. இருப்பினும் பொறுமையாக அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்து வாருங்கள். இது உங்கள் குழந்தையை போதுமான நீர்ச்சத்துடனும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.


வெதுவெதுப்பான நீர், லெமன், தேன் 

உங்கள் குழந்தைக்கு சளி பிடித்த நேரத்தில் அவர்களை போதுமான நீர்ச்சத்துடனும் வைத்திருக்க வேண்டும். 1 கப் நீருடன் லெமன், தேன் கலந்து கொள்ளுங்கள். 1 கப் நீரை சூடாக்கி அதில் 1/2 லெமன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நீரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என உங்கள் குழந்தைக்கு கொடுத்து வாருங்கள்.



கடுகு எண்ணெய், பூண்டு, வெந்தயம்

 1/4 கப் கடுகு எண்ணெய், சில பூண்டு பற்கள் மற்றும் வெந்தய விதைகள் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை உங்கள் குழந்தையின் நெஞ்சு, முதுகுப் புறம் தடவி வாருங்கள். மீதமுள்ள எண்ணெயை ஒரு டப்பாவில் அடைத்து வையுங்கள்.


வெதுவெதுப்பான நீர் 

கடினமான சளியை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு போக்குதல் சிறந்த பலன் தரும். மூக்கு ஒழுகுதல் என்பது பெரிய பிரச்சினை ஆகும். இந்த சளி அப்படியே வறண்டு போய் மூக்கை அடைத்து பெரிய தொல்லையை ஏற்படுத்தும். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்து மூக்கை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் தேவையில்லாமல் மூக்கை குடைவதை தடுத்து காயங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.



யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் 

யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் மார்பக சளியை போக்க பெரிதும் பயன்படுகிறது. இந்த ஆயில் குழந்தைக்கு ஏற்படும் தலைவலி, சளி போன்றவற்றை போக்குகிறது. இந்த ஆயிலை அதிகமாக தடவாமல், லேசாக சில சொட்டுகள் தெளிக்கலாம்.


ஆவி பிடித்தல் 

சளி பிடித்த சமயங்களில் ஆவி பிடித்தலும் உங்கள் குழந்தைக்கு நல்ல பலனை தரும். இதை தொடர்ந்து செய்யும் போது சுவாச பாதை சுத்தமாகி சளி வெளியேறி விடும்.


வெதுவெதுப்பான குளியல் 

வெதுவெதுப்பான குளியல் எல்லாருக்கும் உதவும். எனவே குழந்தைக்கு சளி பிடித்த சமயங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வையுங்கள். இது சளி இளகி வெளியேற உதவும்.


துளசி தண்ணீர் 

துளிசி சளிக்கு சிறந்த மருந்தாகும். இதன் சாறு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றை எதிர்த்து போரிடுகிறது.சில துளிசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரை 2 ஸ்பூன் அளவு கொடுத்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.



மருத்துவரை எப்போது அணுக வேண்டும்

 3 வாரங்கள் ஆகியும் உங்கள் குழந்தையின் சளி போக வில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. கழுத்தை 3-6 மாதங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். தொடர்ச்சியான இருமல், தொண்டை அழற்சி இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.