கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .
பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன .
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .
நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .
உடல் சூட்டை தனிக்கும் .
குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .
கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .
இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை
நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .
இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .
இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .
குறிப்பு : இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது .