Saturday, December 1, 2018

முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்... ஐஸ் கட்டி மட்டும் போதும்...

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு நிறைய சருமப் பிரச்சினைக்ள வரும். பருக்கள் ஏற்படும். அப்படி நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஆனால் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக
ஐஸ் கட்டி ஒத்தடம் இருக்கும். ஐஸ் சருமத்தில் அதிக அளவிலான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.நாம் முறையாக சருமத்தைப் பராமரித்தால் வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்க முடியும்.முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.


வெறும் ஐஸ் கட்டிகளைப் பயய்படுத்துவதை விடவும் கூட, ஆலிவேரா ஜெல்லை ஐஸ் டிரேயில் போட்டு ஐஸாக்கி அதன்பின் அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் புதினா இலை சாறை ஐஸ் டிரேயில் வைத்து ஐஸ் தயாரித்துப் பயன்படுத்துங்கள்.பால், க்ரீன் டீ போன்றவற்றைச் சேர்த்து ஐஸ் டிரேயில் வைக்கலாம்.




குளிர்ந்த நீரால் நன்கு முகத்தைக் கழுவ வேண்டும். அப்ளை செய்து மசாஜ் செய்து சில நிமிடங்கள் உலர விட்டு அதன்பின் ஈரமில்லாத டவலால் முகத்தை நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். அதன்பின், ஐஸ் கட்டிகளை எடுத்து முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவிடுங்கள். அதன்பின் ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து நன்றாக சுற்றி முகத்தில் ரப் செய்யுங்கள்.தொடர்ந்து ஐஸ் கட்டிகளை இவ்வாறு சருமத்தில் மசாஜ் செய்து வந்தால் மிக விரைவிலேயே நல்ல மாற்றத்தை உங்களால் பார்க்க முடியும்.

\