Sunday, December 30, 2018

மீன ராசி வருட ராசி பலன் 2019

திறந்த மனதுடன் நட்பு பாராட்டும் மீன ராசி அன்பர்களே!

ராசிநாதனான குருபகவான் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். குருபகவானால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றி
கரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவான்  மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு  ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நற்பலனை அள்ளித் தர முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.  பகைவர்சதி உங்களிடம் எடுபடாது.

சனிபகவானால் தொழிலில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். செல்வாக்கு முன்பு போல இல்லாமல் போகலாம். உடல் உபாதையால் சிரமப்படலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் ஏப். 26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரது கெடுபலன்கள் சற்று குறையும்.

ஆக மொத்தத்தில் நாளைய சரித்திரம் உங்களின் வெற்றியை சொல்லும் விதத்தில் விடாமுயற்சியுடன் பாடுபடுவீர்கள். 
பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கலாம். எடுத்த செயலைத் துரிதமாக முடிப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஓ கோ எனப் புகழ்வர். ஆனால் மார்ச்13 முதல்  மே19 வரை வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். உறவினர் மத்தியில் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.  தடைபட்ட திருமணம்  கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதிய வீடு, சொத்து  வாங்கலாம். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாம். மார்ச்13 முதல் மே19 வரை  பொறுமையைக் கடைபிடிக்கவும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். 
அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம், அதன் பின் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி நிலைக்கும்.   
பணியாளர்களின் திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். 
விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு  நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசு ஊழியர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். 
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். மார்ச்13 முதல்  மே19 வரை வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும்.  வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய நேரலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சிறக்கும்.  அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 13 முதல்  மே 19 வரை செலவு அதிகரிக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதை விட அறிவை பயன்படுத்தி வருமானம் தேடுவது நல்லது.  சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை  மாற்ற நேரிடலாம். 

சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். 
கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை விடாமுயற்சி தேவைப்படும். புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  வரவேண்டிய விருது  தட்டிப் பறிக்கப்படலாம். அதே நேரம் பணவிஷத்தில்  பின்னடைவு இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். பிப்.13க்கு  பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும்.  விரும்பிய  நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். மார்ச்13க்கு பிறகு முதல் மே19 வரை மெத்தனம் வேண்டாம். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். 

விவசாயிகள்  நல்ல வளத்தோடு காணப்படுவர். நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பிப்.13க்கு பிறகு கடின உழைப்பு தேவைப்படும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் எடுப்பர். உறவினர் மத்தியில் சுமுகநிலை ஏற்படும். தோழிகள் உதவிகரமாக  செயல்படுவர். மனம் போல திருமணம் கைகூடும். கணவனிடத்தில் அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். 
புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் 

வரப் பெறலாம்.  அதே நேரம் மார்ச்13 முதல்  மே19 வரை குடும்ப நன்மைக்காக பெண்கள் சற்று பொறுமையுடன் நடப்பது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் சீரான வருமானம் பெறுவர். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். உடல்நிலை திருப்தியளிக்கும். 
மருத்துவ செலவு வெகுவாக குறையும்.

பரிகாரம்:

*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
*  வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு நெய்தீபம்
*  பவுர்ணமியன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை

பாடுங்க! பாடுங்க

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே