Saturday, October 6, 2018

12 நோய்களை குணப்படுத்தும் காய்கள்

Image result for 12 நோய்களை குணப்படுத்த இந்த காய்கள் மட்டும் இருந்தால் போதும்!இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான நோயைத் தீர்க்கும் குணமுண்டு.

அந்த வகையில் 12 நோய்களை குணப்படுத்தும் குறிப்பிட்ட சில காய்கறிகளைப் பற்றி பார்ப்போம்.


12 நோய்களை தீர்க்கும் காய்கள்

சிறுநீரகக் கோளாறு – கத்தரிக்காய்

கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. உடல் இயக்கத்தையும் சிறுநீரக செயல்பாட்டையும் சீராக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது.

பக்கவாதம் – கொத்தவரங்காய்

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கொத்தவரங்காயில் காணப்படுகின்றன.

இன்சோம்னியா – புடலங்காய்

சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஹெர்னியா – அரசாணிக்காய்

நிணநீர் பிரச்சனைகளுக்கு பயன் தரவல்லது அரசாணிக்காய். ஒவ்வாமை, வாந்தி, பேதி, பித்தப்பை கல் போன்றவைக்கு அரசாணிக் காய் சாப்பிடுவதால் நல்ல தீர்வு காண முடியும்.

கொலஸ்ட்ரால் – கோவைக்காய்

கோவைக்காய் அல்லது அதனுடைய இலை சாறு எடுத்து குடித்துவர பிரச்சினைகள் கொலஸ்ட்ரால் முற்றிலுமாக நீங்கும்.

ஆஸ்துமா – முருங்கைக்காய்

முருங்கை இலை சாறு எடுத்து குடித்து வரவும் அல்லது நன்கு முற்றிய விதையினை சப்பி சாப்பிட்டால் பிரச்சினைகள் நீங்கும்.

நீரிழிவு – பீர்க்கங்காய்

நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காய் சாறு எடுத்து குடித்துவர வேண்டும் அல்லது மென்று சாப்பிட வேண்டும்.

மூட்டுவலி – தேங்காய்

மூட்டு வலி விரவாக குறைய நன்றாக முத்திய எண்ணெய் பசையுள்ள தேங்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் பிரச்சினை நீங்கும்.

தைராய்டு – எலுமிச்சை

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை பழத்தை தோலோடு மிக்சியில் அரைத்து சாறு எடுத்து குடித்துவர பிரச்சினைகள் தீரும்.

உயர் ரத்த அழுத்தம் – வெண்டைக்காய்

வெண்டைக்காயில் மிக அதிக அளவில் ஃபோலிக் அமிலமும் பொட்டாசியமும் வைட்டமின் சியும் உள்ளதுத. மேலும் அதில் புரதம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இதயக்கோளாறுகள் – வாழைக்காய்

சிறுநீர் உபாதைகளுக்கு நல்லது தீர்வு தரவல்லது பூசணி. இது, மலச்சிக்கல், தலைபாரம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றுக்கு நல்ல பலனளிக்கும்.

நெஞ்சுசளி – வெண்பூசணிக்காய்

குடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற வெண்பூசணி சாறு பயன்படுகிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரிக்கவும், நெஞ்சுசளி, இருமல் போன்ற நோய்களை தடுக்கும் மருந்தாகவும் வெண்பூசணி சாறு செயல்படுகிறது.