Skip to main content

வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்

தேவையான பொருட்கள்:

பால் – 2 கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய் – 1 (தட்டிக் கொள்ளவும்)

பாதாம் – 4
பிஸ்தா – 6
குங்குமப்பூ – சிறிது

செய்முறை :

* பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும்.

* அடுத்து அதில் குங்குமப்பூ கலந்த பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான மசாலா பால் ரெடி!!!

Popular posts from this blog

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்