நீரிழிவு நோய்க்கும், சிறுநீரக கல்லுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. வாழைப்பூ மாதவிடாய் பிரச்சினைக்கும் சிறந்த மருந்து. இந்த வாழைப்பூத் துவையலில் துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என்ற ஐச்சுவை உள்ளது.
தேவையானப் பொருள்கள்:
- வாழைப்பூ - ஒன்று
- புளி - எலுமிச்சையளவு
- கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 3
- தேங்காய் - ஒரு கைப்பிடி
- எண்ணெய் - வதக்க
- தாளிக்க:
- கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
- மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.
- வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவை உள்ள வாழைப்புத்துவையல் ரெடி. இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்