Skip to main content

மார்பு எலும்பை பலப்படுத்த வேண்டுமா


முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும். வலது 
கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். 

பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது கை மணிக்கட்டைப் பிடிக்கவும். இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள்இழுத்துக் கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்கவேண்டும். 

பிறகு மூச்சை வெளிவிட்டு கொண்டே முன்னே குனிந்து நெற்றியை அல்லது கீழ்த்தாடையை இடது முழங்காலில் வைத்து 20 விநாடிகளுக்கு அதே நிலையில் சாதாரண சுவாசத்தில் இருக்க வேண்டும். பிறகு ஆழ்ந்த உள் மூச்சுடன் நிமிர்ந்து கைகளை விடுவித்தவுடன் கால்களை விடுவித்தவுடன் கால்களை மாற்றி மேலே செய்தது போல் செய்யவும். 

பயன்கள் :

உள் உறுப்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடலின் எடையை குறைக்க உதவுகிறது. முதுகெழும்பு, இடுப்பெழும்பு கழுத்து போன்றவற்றை வலிமையடைய செய்கிறது. மார்பு எலும்பினை பலப்படுத்துகிறது. 

இதயம், நுரையீரல் போன்றவற்றை வன்மையடையச் செய்கிறது. கல்லீரல், மண்ணீரல் இவற்றை இயல்பு நிலையில் வைத்து உடலை பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கைகளில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் வலிமை தருகிறது.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.