Sunday, July 6, 2014

முகப்பரு பிரச்சனைக்கு புதிய தீர்வு

பருவப் பெண்களை படுத்தும் பெரும் பிரச்சனை பருதான்! பருக்களை ஓட ஓட விரட்டலாம் இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்!

பயத்தம் பருப்பு-2 டீஸ்பூன், 
விளாம்பழ விழுது - 2 டீஸ்பூன், 
பாதாம் பருப்பு - 2

இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊற வைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். விளாங்காய் கிரீம் ரெடி! இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள் கூட மாயமாக மறைந்துவிடும். 

தழும்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். (கிரீமை உபயோகிக்கும் முன், கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம். பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த கிரீம் ஆன்டி செப்டிக்காக செயல்பட்டு மருத்துவப் பலனை தரும்). 

விளாங்காயும் பாதாம் பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம் பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.