Skip to main content

கூந்தல் பிரச்சனைக்கு கூலான தீர்வு

நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். 

எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதுடன், முடியை
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. நல்லெண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்..  

வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பான சூடேற்றி, தலையில் தடவி மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும். 

நல்லெண்ணெய் மசாஜை தவறாமல் வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவை ஸ்கால்ப்பில் உள்ள செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். 

நல்லெண்ணெயை தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தினால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி அதிகரித்து, முடி வெடிப்பை சரிசெய்யும். பொதுவாக கூந்தல் உதிர்தலானது மன அழுத்தம் மற்றும் டென்சனால் தான் ஏற்படுகிறது. 

இத்தகைய மன அழுத்தம் மற்றும் டென்சனை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் போக்க முடியும்.   பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் நல்லெண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லை விலகும்

வாரம் இருமுறை இரவில் படுக்கும் போது நல்லெண்ணெயை தலைக்கு தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கூந்தல் வறட்சியடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் பொலிவோடு இருக்கும்.  

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.