Monday, May 26, 2014

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

தேவையானவை: 

முழு நெல்லிக்காய் - 10 
வெற்றிலை - 20
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி 
கறிவேப்பிலை -  ஒரு கைப்பிடி 
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 6 பல் 
வால் மிளகு- ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கு.

செய்முறை: 

• நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.

• கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• வெறும் வாணலியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும்.

• பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

• நன்றாக வதங்கியதும் ஆற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.

• அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.