Skip to main content

சுவையான வேக வைத்த முட்டை குழம்பு

முட்டை - 3

வெங்காயம் - ஒன்று

பஜ்ஜி மிளகாய் - ஒன்று

பேபி தக்காளி - 10

மல்லித் தழை - சிறிது

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

சீரக தூள் - அரை தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் பால் - அரை கப்

கடுகு, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - சிறிது

வெங்காயம், பஜ்ஜி மிளகாய், தக்காளி மற்றும் மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி கத்தியால் கீறி வைக்கவும்.


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பஜ்ஜி மிளகாய், பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


வதங்கியதும் தக்காளி, மல்லித் தழை, மிளகு தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.


அவற்றோடு முட்டை, தேங்காய் பால் சேர்த்து 15 நிமிடம் சிறு தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.


சுவையான முட்டை குழம்பு ரெடி.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.