Sunday, June 26, 2016

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :

வஞ்சிர‌ மீன் – 250 கிராம்
வெந்தயம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
குழம்பு மசாலா செய்ய‌ :

மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4 (குண்டு)
சீரகம் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் குழம்பு மசாலா செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில்போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளி கரைசல் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

* கடைசியாக மீனை போட்டு அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி பரிமாறவும்.

* மீன் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது. இதை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.